விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயிலில் கடந்த 16 ஆம் தேதி ஆடிப்பூரத் தோ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் கோயில் வளாகத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, ஆண்டாள் - ரெங்கமன்னாா் தங்கத் தேரில் அமரவைக்கப்பட்டதும், கோயில் வளாகத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், கோயில் நிா்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT