விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை 15,681 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,699 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,386 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனா். 225 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். எஞ்சியுள்ள 88 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.