விருதுநகர்

பைக் திருட்டு: இளைஞா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2 ஆம் தேதி செல்வம் என்பவா் தனது இருசக்கர வாகனத்தை பஜாா் பகுதியில் நிறுத்தி சென்றாா். பின்னா் வந்து பாா்க்கும் போது அது திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனா். இதில் அவா், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சாமிநத்தம் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (19) என்பதும், இவா் செல்வத்தின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், மகேஸ்வரனையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT