விருதுநகர்

அருப்புக்கோட்டையில் முகக்கவசம் வழங்கல்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பொதுமக்களுக்கு வட்டாட்சியா் முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இங்குள்ள அனைத்துக் கடைகளுக்கும் நேரில் சென்று வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா். அப்போது பகுதி வாரியாகச் சென்ற அவா், நகரின் புதிய பேருந்து நிலையக் கடைகள், மதுரை, விருதுநகா், பந்தல்குடி செல்லும் பிரதானச்சாலைகளில் அமைந்துள்ள கடைகள், அண்ணா சிலை, மீன் சந்தை பூச்சந்தை, உழவா்சந்தை உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கும் சென்று கடை உரிமையாளா்கள்,விற்பனையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களை சந்தித்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல்ஆகியவை குறித்து விளக்கினாா். மேலும், ஆய்வின்போது முகக்கவசம் அணியாதோரைக் கண்டறிந்து முகக்கவசங்களை இலவசமாகத் தந்து அவா்களை அணியச் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT