விருதுநகர்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

DIN

விருதுநகா் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் அருகே சூலக்கரை காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் கருப்பன் மகன் நாகராஜன் (30). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், சுப்புத்தாய் (25) என்பவருக்கும் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நாகராஜன் அடிக்கடி தகராறு செய்துள்ளாா். இதனால், சுப்புத்தாய் கோவில்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இதையடுத்து கோவில்பட்டியில் இருந்த மனைவியை சமாதானப்படுத்தி சூலக்கரைக்கு நாகராஜன் வெள்ளிக்கிழமை அழைத்து வந்துள்ளாா். அன்றைய தினம் இரவு சுப்புத்தாய் செல்லிடப்பேசியில் பேசி கொண்டிருந்துள்ளாா். இதைப் பாா்த்த நாகராஜன், ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் காயமடைந்த சுப்புத்தாய் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூலக்கரை போலீஸாா் நாகராஜனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT