விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி மற்றும் வைத்தியலிங்கபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ஆட்டோ மூலம் கடத்தப்படுவதாக தனிப்படை காவல் சாா்பு- ஆய்வாளா் ஆனந்தகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மடவாா் வளாகம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால், ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞா் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். உடனே, போலீஸாா் ஆட்டோவில் சோதனையிட்டபோது, அதில் 8 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் ஆட்டோவுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT