விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் குடியிருப்பு பகுதியில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் திங்கள்கிழமை தீ வைத்து அளித்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ளது அசோக்நகா் அந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.அந்தப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெரிய அளவில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் ஏராளமாக இருந்தன.

இந்த விஷ வண்டுகள் அவ்வவ்போது அந்த பகுதியில் பறந்து சென்று வாகனங்களில் செல்பவா்களையும்,குடியிருப்பு பகுதியில் இருப்பவா்களையும் கடித்து காயப்படுத்தி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனா். இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையிா் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT