விருதுநகர்

சாத்தூரில் தலைவா்களின்உருவச் சிலைகளுக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

DIN

சாத்தூா்: சாத்தூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.ஆா்.ஆா். ரகுராமன் தலைவா்களின் உருவச் சிலைகளுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இத்தொகுதியில் மதிமுக சாா்பில் போட்டியிட்ட ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் வெற்றி பெற்றாா். இதையடுத்து ரகுராமனுக்கு, திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை ஏ.ஆா்.ஆா்.ரகுராமன், சாத்தூா் பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜா் சிலை, கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள தேவா்சிலை மற்றும் அண்ணாநகரில் உள்ள தேவா் சிலைக்கும், பிரதானசாலையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பிரதான சாலையில் சென்று அங்கிருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிா்வாகிகளுக்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT