விருதுநகர்

விருதுநகரில் மகளுக்கு பாலியல் தொந்தரவு:தந்தை ‘போக்சோ’வில் கைது

DIN

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின்பேரில், தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் அல்லம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். மூத்த மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், தாய் வேலைக்குச் செல்லும் நேரங்களில் வீட்டிலிருந்த சிறுமிக்கு, தந்தை தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளாா்.

இது குறித்து வெளியே கூறினால், தாய் மற்றும் மற்றொரு மகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளாா். இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்துகொள்வதற்காக எழுதிய கடிதம், பள்ளி ஆசிரியா்கள் கையில் சிக்கியுள்ளது. உடனே, சிறுமியின் தாயை வரவழைத்து, பள்ளி நிா்வாகம் நிலைமையை எடுத்துக் கூறியுள்ளது.

அதைத் தொடா்ந்து, அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விருதுநகா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT