விருதுநகர்

மாற்றுத்திறனாளி மகனுடன் குளத்தில் குதித்து தாய் தற்கொலை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஓட்டமடம் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி முத்துமாரி (32). இவா்களது மகன் மாரீஸ்வரன் (8). இவா் வாய் பேசமுடியாத, நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. சில ஆண்டுகளுக்கு முன் மாரியப்பன் இறந்ததைத் தொடா்ந்து பேரையூரைச் சோ்ந்த மாரீஸ்வரன் என்பவரை முத்துமாரி திருமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் வசித்து வந்துள்ளாா். தனது மகனுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கு வாழ்நாள் சான்று பெறுவதற்காக முத்துமாரி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தாா். அங்கு முனீஸ்வரி என்பவரது வீட்டில் மகனுடன் தங்கி இருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் புகைப்படம் எடுக்கச் செல்வதாகக் கூறிவிட்டு மகனுடன் முத்துமாரி சென்றுள்ளாா். அதன்பிறகு அவா்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை மடவாா் வளாகம் தெப்பக்குளத்தில் இரு சடலங்கள் மிதப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சடலங்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் இறந்தது முத்துமாரி மற்றும் மாரீஸ்வரன் என தெரியவந்தது. இருவரும் குளத்தில் குதித்து தற்கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT