விருதுநகர்

அனுப்பன்குளத்தில் இன்று மின்தடை

DIN

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளத்தில் புதன்கிழமை (ஆக. 10) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் பெறும் நாரணாபுரம், அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

விரிவடையும் சென்னை மாநகராட்சி?

SCROLL FOR NEXT