விருதுநகர்

கட்டங்குடியில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கட்டங்குடியில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கட்டங்குடி நெசவாளா் குடியிருப்பில் சுமாா் 240 வீடுகளுக்கு மேல் உள்ளன. இந்தக் குடியிருப்புக்குச் செல்லும் சாலையிலும், இந்தக் குடியிருப்பிலிருந்து விவசாய நிலங்களுக்குச் செல்லும் சாலையிலும் போதிய மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. அதிக இடைவெளி விட்டு மின் விளக்குகள்

அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

பேருந்து நிறுத்தப் பகுதியில்கூட போதிய மின் விளக்குகள் இல்லாததால், இரவில் பேருந்திலிருந்து இறங்குவோா் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, இந்தக் குடியிருப்பிலும், கட்டங்குடி வரையிலான சாலையிலும் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT