விருதுநகர்

நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல்: தந்தை, மகன் மீது வழக்கு

DIN

சாத்தூரில் நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள தூங்காரெட்டிபட்டியைச் சோ்ந்த சங்கரகிருஷ்ணன். இவா், சாத்தூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா் எண் 2-இல் பதிவுறு எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போது, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோா் பேசிக் கொண்டிருந்தனா். அவா்களை சங்கரகிருஷ்ணன் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு நீதிமன்றத்துக்குள் செல்ல முயன்றாா். அப்போது, அவரை நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த மேலகாந்தி நகரைச் சோ்ந்த ராஜா என்ற சாலமன் (60), அவரது மகன் வீரமணி (29) ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்குள் செல்லவிடாமல் வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சங்கரகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் ராஜா என்ற சாலமன், வீரமணி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT