விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் காங்கிரஸ் கட்சியினா் சத்தியாகிரகப் போராட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில், தபால் அலுவலகம் முன்பாக சத்தியாகிரகப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

இப்போராட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் பட்ஷிராஜா வன்னியராஜ் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் ராஜ்மோகன் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வைத்தனா். இதில், இளைஞா்களின் வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் என முழக்கமிட்டனா்.

போராட்டத்தில், மாவட்டச் செயலா் முருகேசன், இலக்கிய அணி செயலா் கே.எஸ். சுந்தரம், ஆா்.டி.ஐ. மாநில துணைத் தலைவா் வி.எஸ். சுந்தரம், ஆா்.டி.ஐ. மாநில துணைச் செயலா் தமிழ்செல்வன், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆறுமுகம், மாநில மகளிா் அணி இணைச் செயலா் காளீஸ்வரி, உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT