விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே அடிப்படை வசதிகள் செய்த தர கோரிக்கை

DIN

வத்திராயிருப்பு அருகே சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என, அப்பகுதி பெண்கள் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட மாத்தூா் செல்லும் சாலையில் காளியம்மன் கோயில் தெரு உள்ளது. இப்பகுதியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதி பெண்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், இப்பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது என புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ஊராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகத்தினா் தங்களது பகுதியை நேரில் பாா்வையிட்டு, பெண்கள் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT