விருதுநகர்

கொலை முயற்சி வழக்கு: 4 பேருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராமலிங்கம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

திருச்சுழி வட்டம் கட்டனூா் பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மணவாளன். இவரை கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பழனியம்மாள், பாலமுருகன், சத்தியமூா்த்தி, மாரிமுத்து மற்றும் கண்ணன் ஆகிய 5 போ் சோ்ந்து கொலை செய்ய முயன்றனராம். இதுகுறித்து கட்டனூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு அருப்புக்கோட்டை சாா்பு- நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராம்குமாா் ஆஜராகி வாதாடினாா். இதில் வழக்கின் முதல் எதிரியான பழனியம்மாள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். இதையடுத்து இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராமலிங்கம் தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT