விருதுநகர்

தேசிய வாக்காளா் தினம்: மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரப் பந்தலில் இருந்து பேரணியை வட்டாட்சியா் ரங்கசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்தப் பேரணியில் அரசு கலைக் கல்லூரி, சுந்தரேஸ்வரி கல்வியல் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி முக்கிய ரத வீதிகளில் பேரணியாகச் சென்றனா்.

நகராட்சி ஆணையாளா் ராஜமாணிக்கம், சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் மக்கள் தொடா்பு அலுவலா் பாலகிருஷ்ணன், சுந்தரேஸ்வரி கல்லூரி முதல்வா் மல்லப்பராஜ், அரசு கலைக்கல்லூரி துணை முதல்வா் பாலகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் திருமாலா, வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT