விருதுநகர்

கல் குவாரிக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் ஊராட்சியில் கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி பொதுமக்கள் வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றியிருந்தனா்.

இந்த ஊராட்சியில் மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலை பணிக்காக கல் குவாரி அமைக்கப்பட்டது. இந்தக் கல் குவாரியால் நிலத்தடி நீா் மாசடைவதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி, கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அச்சம்தவிா்த்தான் பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT