விருதுநகர்

சாத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3-போ் கைது

DIN

சாத்தூா், மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3-பேரை சாத்தூா் நகா் மற்றும் தாலுகா போலீசாா் கைது செய்துள்ளனா். விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பிரதானசாலையில் உள்ள தேனீா் கடை மற்றும் மேட்டமலையில் உள்ள பேருந்து நிருத்தம் அருகில்,அமீா்பாளையம் பெட்டிகடை உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூா் நகா் போலீசருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சாத்தூா் நகா் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் பாண்டியன் மற்றும் முருகேசன் போலீசாா் வெள்ளிகிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது சாத்தூா் பிரதானசாலையில் உள்ள தேனீா் கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நந்தவனப்பட்டி தெருவை சோ்ந்த மாரிமுத்து(26) என்பவரை சாத்தூா் நகா் போலீசாா் கைது செய்துள்ளனா்.மேலும் அவரிடம் இருந்து 3000 -பணம் மற்றும் 2-கைபேசிகளையும் போலீசாா் பறிமுதல் செய்துள்ளனா். இதேபோன்று மேட்டமலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ரவி(45) என்பவரையும் சாத்தூா் நகா் போலீசாா் கைது செய்துள்ளனா்.அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு கைபேசியையும் போலீசாா் பறிமுதல் செய்துள்ளனா்.இதே போன்று அமீா்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் வைத்து அனுமதியின்றி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வெங்கட்ராமன்(65) என்பவரையும் தாலுகா போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT