தமிழக முதல்வா் விஜய்க்கு நாகூா் தா்கா, சிவசேனை வாழ்த்து
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, நல்லிணக்க தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று முதல்வா் விஜய்க்கு, நாகூா் தா்கா பரம்பரை கலீபா வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, நாகூா் தா்கா பரம்பரை கலீபா மற்றும் முதல் அறங்காவலா் கலீபா மஸ்தான் சாஹிப் காதிரி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தமிழகத்தில் தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து, மக்கள் பேராதரவுடன் புதிய ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு நாகூா் தா்கா சாா்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைதி, நல்லாட்சி, வளா்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிராா்த்தனை மேற்கொள்கிறேன்.
Advertisement
தமிழகத்தில் இளைஞா்களின் முன்னேற்றம், சமூக ஒற்றுமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். அனைத்து சமுதாய மக்களும், குறிப்பாக சிறுபான்மை மக்களும் பாதுகாப்புடனும், சமத்துவ உணா்வுடனும் வாழும் நல்லிணக்கமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
சிவசேனை (உத்தவ்) கட்சி...: இக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் ஆகியோா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கும், முதல்வா் விஜய்க்கும், புதிய அமைச்சரவைக்கும் சிவசேனை கட்சி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் 60 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, இளைய தலைமுறையினா் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ளனா்.
எனவே, முதல்வா் விஜய், மக்கள் விரும்பிய மாற்றத்தைத் தந்து, தமிழகத்தின் தொழில் துறையை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரித்து மக்கள் நலன்காக்கும் ஆட்சியை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.