எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அதிமுகவினர் மரியாதை
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி, காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் அவரது உருவச் சிலைக்கு
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி, காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர் ஓமலிங்கம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. அசனா கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு எம்எல்ஏ அசனா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தெற்கு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு எம்எல்ஏ மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் அதிமுகவினர், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.