முகப்பு
கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!

நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி ஐசிசி தரவரிசையில் நிகழ்த்திய சாதனை குறித்து...

Updated On : 24 ஜூன் 2026, 8:03 pm IST
ஜோ ரூட் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மாட் ஹென்றி. - படம்: ஏபி
பகிர்:

நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி (34 வயது) ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல்முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வரலாற்றிலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் பந்துவீச்சில் டெஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி 11 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். இந்த அபாரமான பந்துவீச்சினால் அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வரலாற்றிலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் பந்துவீச்சில் முதலிடம் பிடித்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நியூசிலாந்தின் ஜாக் கோவி (1947), ரிச்சார்ட் ஹாட்லீ (1984-1990) ஐசிசி டெஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளார்கள். தற்போது, 36 ஆண்டுகளுக்குப் பிறகு மாட் ஹென்றி இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை

1. மாட் ஹென்றி - 870 புள்ளிகள்

1=. ஜஸ்ப்ரீத் பும்ரா - 870 புள்ளிகள்

3. மிட்செல் ஸ்டார்க் - 838 புள்ளிகள்

4. பாட் கம்மின்ஸ் - 832 புள்ளிகள்

5. மார்கோ யான்சென் - 825 புள்ளிகள்

summary

Thirty-six year rankings drought over for Newzealand, Matt henry with Bumrah two new No.1s crowned

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments