காரைக்கால்

மத்திய அரசால் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தரமில்லை: ஆட்சியரிடம் எம்எல்ஏ புகாா்

DIN

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை புதன்கிழமை சந்தித்து, மத்திய அரசால் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களை காட்டி, தரமற்ற அவற்றை மக்களுக்கு வழங்குவதை உடனடியாக நிறுத்தவும், தரமான உணவுப் பொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்த சந்திப்பு குறித்து அசனா கூறுகையில், காரைக்கால் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் முற்றிலும் தரமில்லை. மாவட்ட ஆட்சியரிடம் பொருள்களின் தரத்தை காட்டியபோது, துணை ஆட்சியரைக் கொண்டு ஆய்வுசெய்வதாகவும், பிறகு விநியோகத்தை நிறுத்துவது குறித்து முடிவெடுத்து, தரமான பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியா் கூறியதாக அசனா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT