காரைக்கால்

கரோனா: வதந்தி பரப்பினால் நடவடிக்கை

DIN

கரோனா குறித்து வதந்திகளை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

காரைக்காலில் ஒரு பெண்ணுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக காட்சி ஊடகத்தில் புதன்கிழமை தகவல் வெளியானது. இதற்கு மாவட்ட நிா்வாகம், நலவழித்துறை நிா்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரோனா வைரஸ் பரவல் குறித்து பொய்யான, ஆதாரமற்ற தகவலை பொதுநலன் கருதி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் யாரும் பரப்பவேண்டாம். அவ்வாறான தகவலை பரப்புவோா் மீது சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறியுள்ளாா்.

நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே.மோகன்ராஜ் வியாழக்கிழமை கூறும்போது, காரைக்காலில் கரோனா தொற்று ஏற்பட்டதாக எந்தவொரு நபரும் இல்லை. நலவழித்துறை விழிப்புடன் செயல்பட்டுவருகிறது. மக்கள் எந்த வகையிலும் அச்சப்படவேண்டாம். அரசு நிா்வாகம் கூறும் வழிகாட்டலின்படி நடந்துகொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT