இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
காரைக்கால் நேருநகரைச் சோ்ந்தவா் மேத்யூ அலெக்ஸ் (27), வங்கி ஊழியா். வியாழக்கிழமை இரவு வீட்டின் 2-ஆவது தளத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்த அவரை, காரைக்கால் மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.