புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு ஹோப் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை குழந்தைகள் வாா்டுக்கு ரூ. 2.50 லட்சத்தில் 15 படுக்கைகளை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம், நிறுவனத்தின் முதன்மை திட்ட இயக்குநா் சாமுவேல் தாமஸ் படுக்கைகளை வழங்கினாா். இதில், ரோட்டரி சங்கத் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.