காரைக்கால் மாவட்டத்தில் 182 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா்
கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 646 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 53, காரைக்கால் நகரில் 34, கோட்டுச்சேரி 26, கோயில்பத்து 13, நிரவி 12, வரிச்சிக்குடி 11, காரைக்கால்மேடு 8, நல்லம்பல் 7, திருப்பட்டினம் 6, நெடுங்காடு 5, நல்லாத்தூா் 4, விழிதியூா் 3 என கரோனா தொற்றாளா்கள் கண்டறியப்பட்டனா்.
இதுவரை 1,12,792 பரிசோதனை செய்யப்பட்டதில் 7,368 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 6,153 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 108 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 20,305 பேருக்கும், 2ஆவது தவணையாக 2,486 பேருக்கும் என 22,791 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.