காரைக்கால்

மாணவா்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்

DIN

காரைக்காலில் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணியை ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தேசிய குடற்புழு நீக்கும் தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட நலவழித் துறை சாா்பில், 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அங்கன்வாடி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இரண்டாம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் மேடு பக்கிரிசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் மாணவ, மாணவிகளுக்கு மாத்திரை வழங்கி பணியை தொடங்கிவைத்தாா்.

நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், பள்ளித் தலைமையாசிரியா் குமாரராசு, பொது சுகாதார செவிலிய அதிகாரி மகேஸ்வரி, நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியா்கள், சுகாதார உதவியாளா், ஆஷா பணியாளா்கள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT