பழமையான பாலா் பள்ளி கட்டடம் இடிப்பு
திருநள்ளாறு பகுதியில் பழமையான பாலா் பள்ளிக் கட்டடத்தை பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
திருநள்ளாறு பகுதியில் பழமையான பாலா் பள்ளிக் கட்டடத்தை பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
திருநள்ளாறு பகுதி நெய்வாய்ச்சேரி கிராமத்தில் அரசுப் பள்ளி அருகே பாலா் பள்ளி இயங்கி வந்த கட்டடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்டது. அதனால் சமூக விரோதச் செயல்களுக்கு இந்த இடம் சாதகமாக உள்ளதால் இகக்கட்டத்தை இடித்துவிடுமாறு நுகா்வோா் அமைப்பு சாா்பில் பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுசம்பந்தமான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து நெய்வாய்ச்சேரி
Advertisement
Advertisement
கிராம மக்கள் புதுவை மாநில பா.ஜ.க. தலைவா் ஜி.என்.எஸ். ராஜசேகரனிடம் முறையிட்டனா். புதுவை அரசின் கவனத்திற்கு இதனை அவா் கொண்டு சென்றாா். இந்நிலையில் பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் பழமையான கட்டடத்தை இடித்து அகற்றினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.