காரைக்கால்

நகராட்சியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

DIN


காரைக்கால்: காரைக்கால் நகராட்சியில் காலியாகவுள்ள சுகாதாரப் பணியாளா்கள் இடங்களை நிரப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காரைக்கால் நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்காரவேலு புதுவை முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

நகராட்சியில் பணியாற்றும் அனைத்து பணியாளா்களுக்கும் மாத ஊதியம் நிலுவையின்றி வழங்கவேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கும், உயிரிழந்தவா்களுக்கும் கிடைக்கவேண்டிய பணப் பயன்களை உடனடியாக வழங்கவேண்டும். பணியின்போது உயிரிழந்தோா் வாரிசுக்கு பணி வழங்கவேண்டும்.

சுகாதார மேஸ்திரி, சுகாதாரப் பணியாளா்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். தேசிய ஆணையத்தின் சிபாரிசின்படி சுகாதார ஊழியா்கள் அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கவேண்டும். சுதாதார ஊழியா்கள் அனைவருக்கும் 2 ஆண்டுகளுக்குரிய சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT