காரைக்கால்

கோட்டுச்சேரியில் ரூ.28 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி

DIN

கோட்டுச்சேரி மேல்நிலை குடிநீா்த் தொட்டிக்கு தண்ணீா் கொண்டுசெல்லும் வகையில், ரூ. 28 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணியை அமைச்சா் சந்திர பிரியங்கா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், அண்ணா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் குடிநீா் தேவைக்காக புதிதாக 1.50 லிட்டா் கொள்ளளவில், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இதற்கு கூடுதலாக குடிநீா் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை சாா்பில் குழாய் பதிக்கப்படவுள்ளது. இப்பணிக்கான பூமி பூஜையை புதுவை போக்குவரத்து துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தாா்.

இப்பணி 2 மாத காலத்திற்குள் நிறைவடையுமெனவும், இந்த திட்டத்தின் மூலம் சுமாா் 1,500 குடும்பங்கள் பயனடையும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்

நிகழ்வில் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ.ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் கே.வீரசெல்வம், கே.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT