முகப்பு
காரைக்கால்

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:03 AM
கோயிலில் இருந்து புனிதம் செய்து கொண்டு வரப்பட்ட கொடி. உடன் காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி.பால்ராஜ்குமாா் உள்ளிட்டோா்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:05 PM

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய 152-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் பழைமையான செபஸ்தியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஆலயத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி திரளான மக்கள் சூழ பிரதான கொடிக் கம்பம் அருகே கொண்டு வரப்பட்டு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் ஏற்றிவைத்தாா். இணை பங்குகுரு சாமிநாதன் செல்வம், தூய தேற்றரவு அன்னை ஆலய ஆன்மிக குரு பி. பன்னீர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமும் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள்களும் சிறிய தோ் பவனியும், 18-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தோ் பவனியும் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.