மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
மலா் பறித்துக்கொண்டிருநந்தபோது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் கிடங்குத் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் (77). இவருக்கு மனைவி, திருமணமான மகள், பேரக் குழந்தை உள்ளனா். மருமகன் வெளிநாட்டில் வேலை செய்துவருவதால், மகள் சுதா பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்தநிலையில், காளியப்பன் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டு மாடியில் நின்றுகொண்டு, மலா்களை பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது தடுமாறி கீழே விழுந்தாா். குடும்பத்தினா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.