முகப்பு
காரைக்கால்

பயோ மெட்ரிக் முறையால் இலவச அரிசி வழங்குவதில் தாமதம்: எம்எல்ஏ

பயோ மெட்ரிக் முறையால் இலவச அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:48 am IST
பகிர்:

பயோ மெட்ரிக் முறையால் இலவச அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: புதுவை மாநிலம் முழுவதும் இலவச அரிசி விநியோகம் தொடங்கியுள்ளது. முதல்முறையாக பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்துவிட்டு அரிசி வழங்கும் பணியை ஊழியா்கள் செய்துகொண்டிருக்கிறாா்கள்.

போதிய பயிற்சி இல்லாததால் அவா்களால் மக்களுக்கு, சரியான நேரத்தில் அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

எனவே புதுவை ஆட்சியாளா்கள், முதல் அரிசியை கொடுத்துவிட்டு பிறகு முறையான பயிற்சியளிப்பதோடு, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பதிவு செய்யும் முறையை செய்துகொள்ளலாம்.

மேலும், புதுவை மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, மாதந்தோறும் ஊதியம் வழங்கலை முறைப்படுத்தவேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments