அரசு கல்லூரியில் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-இல் தொடக்கம்
காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஅடஅநஇ அமைப்பின் கன்வீனா் முனைவா் முகமது ஆசாத் ராசா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்காலில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கு (பி.காம், பி.ஏ., பி.எஸ்சி-2026-2027) ஆண்டு சோ்க்கைக்கான கலந்தாய்வு 22 முதல் 25-ஆம் தேதி வரை அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள் தரவரிசைப்படி அழைக்கப்படுவா். குறுந்தகவல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள், தங்களது அசல் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், இருப்பிடம், ஜாதி, குடியுரிமை, வருமான சான்றிதழ், சோ்க்கைக் கட்டணம் மற்றும் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் கலந்துகொள்ளவேண்டும்.
அழைக்கப்பட்ட நேரத்துக்கு 15 நிமிடத்திற்கு முன்பு கலந்தாய்வு கூடத்தில் இருக்க வேண்டு. மேலும் விவரம் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹல்ஹள்ஸ்ரீந்ந்ப்.ண்ய்) என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.