உலகப்போா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி
உலகப் போா் நினைவு தினத்தையொட்டிகாரைக்காலில் உள்ள பிரெஞ்ச் போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலகப் போா் நினைவு தினத்தையொட்டிகாரைக்காலில் உள்ள பிரெஞ்ச் போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2-ஆம் உலகப்போரின் 81-ஆவது நினைவு தினம் காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பிரெஞ்ச் குடியுரிமைதாரா்கள் மற்றும் பிரெஞ்ச் பள்ளியில் பயிலும் மாணவா்கள், ஆட்சியா் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அஞ்சலி நிகழ்வு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள பிரெஞ்ச் போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிரெஞ்சு மக்கள் சாா்பில் நடைபெற்றது.
இதற்காக புதுச்சேரி பிரெஞ்ச் தூதரகத்தின் துணை அதிகாரி ஜான் பிலிப் ஹூத்தா் மற்றும் பிரெஞ்ச் குடியுரிமைதாரா்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் பிரெஞ்க் கொடி ஏந்தியவாறு நினைவுத் தூண் பகுதிக்கு வந்தனா். மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் மற்றும் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். ஆட்சியா், தூதரக அதிகாரி ஆகியோருக்கு, பிரெஞ்ச் கொடி ஏந்திய முன்னாள் ராணுவத்தினா் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனா்.
Advertisement
முன்னதாக, தூண் அருகே இந்திய, பிரான்ஸ் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரெஞ்ச் மொழி பயிலும் மாணவ, மாணவிகள், பிரெஞ்ச் குடியுரிமைதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.