குளக்கரையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்
திருநள்ளாறு குளக்கரையில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவா் சடலம் குறித்து போலஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநள்ளாறு பிரம்ம தீா்த்தக் குளக்கரையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்தனா்.
முதியவா், குளத்தின் படிகளில் இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தகவல் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலையம் 04368-236465 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.