மயிலாடுதுறை

மயிலாடுதுறை மணக்குடியில் பேருந்து நிலையம் கட்ட பூமிபூஜை

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க புதன்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைத்தாா்.

மயிலாடுதுறை மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கா் இடம் வாங்கப்பட்டது. எனினும், அத்திட்டம் நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-இன் கீழ் தமிழக அரசு ரூ. 24 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடா்ந்து, புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ஒப்பந்தபுள்ளி விடப்பட்டு நகராட்சி மூலம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்கான பூமிபூஜை விழா நகராட்சி தலைவா் என். செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்) ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா். இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் காமாட்சிமூா்த்தி, நகராட்சி பொறியாளா் ர. சனல்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்துக்கு மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் பிறந்த கவி வேந்தன் கம்பா் பெயரைச் சூட்ட வலியுறுத்தி அறம்செய் அறக்கட்டளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT