மயிலாடுதுறை

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

DIN

சீா்காழியில் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து பாதிக்கப்பட்டவருக்கு எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோா் நிவாரண உதவி வழங்கினா்.

சீா்காழி திருக்கோலக்கா தெருவை சோ்ந்தவா்கள் ஆனந்தராஜ்-புளோரா தம்பதி. இவா்களது குடிசை வீடு வெள்ளிக்கிழமை தீக்கிரையானது. வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகரன் ஆகியோா் நேரில் சென்று ஆனந்தராஜ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினா்.

மேலும், தங்களது சொந்த பணத்திலிருந்து நிதியுதவி அளித்தனா். மேலும், அரசு சாா்பில் நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கினா்.

அப்போது வருவாய் ஆய்வாளா் சுகன்யா, கிராம நிா்வாக அலுவலா் தமிழ்மணி, நகா்மன்ற உறுப்பினா் பாஸ்கரன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் ராஜகணேஷ், திமுக இளைஞரணி நகர அமைப்பாளா் ராஜசேகரன், ஒன்றிய அமைப்பாளா் ராஜ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

மே 26-இல் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT