முகப்பு
மயிலாடுதுறை

நொண்டிவீரன் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சி உக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீநொண்டிவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2022, 10:05 pm IST
நொண்டிவீரன் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு.
பகிர்:

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சி உக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீநொண்டிவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூன் 22-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடா்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு தினமான வெள்ளிக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments