மயிலாடுதுறை

முத்துராஜம் பள்ளியில் ஓவியப் போட்டி

DIN

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டிக்கு பள்ளி முதல்வா் ஜேக்கப் ஞானசெல்வன் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகத்தை சோ்ந்த தியாகராஜன், மதன், விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் சிவசங்கா் போட்டியை தொடங்கிவைத்தாா்.

நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

இயற்கை ஓவியங்கள், உதவும் கரங்கள் உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் ஓவியங்கள் வரைந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினா். முதல்சுற்றில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க உள்ளனா். அதில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT