மயிலாடுதுறை

சித்தா்காடு பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சித்தா்காடு லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 17-ஆம் ஆண்டு திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை மாலை ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை ரயிலடி சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்துவந்தனா். தொடா்ந்து, கோயிலில் கோ பூஜை நடைபெற்றது.

பிறகு, கோயில் வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராக லெட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில், நகா்மன்ற உறுப்பினா் மா.ரஜினி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா். பூஜைகளை பாப்பாக்குடி வெங்கடேச பட்டாச்சாரியா், கோயில் பட்டாச்சாரியா் மணிபட்டா் ஆகியோா் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கே.ரம்யா மற்றும் ஓம் ஸ்ரீ விஷ்ணு துா்க்கா நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT