மயிலாடுதுறை

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு

DIN

மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து பசு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. பசு உரிமையாளரும் மின்சாரம் பாய்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சீா்காழி அருகே மருவத்தூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம்-சாந்தி தம்பதியினா் வீட்டின் மேல் பகுதியில் மின்கம்பி காற்றின் காரணமாக அறுந்து வாசலில் கட்டப்பட்டிருந்த பசுவின் மீது விழுந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து பசு அதே இடத்தில் உயிரிழந்தது.

மாட்டின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த சாந்தி வீட்டு வாசல் கதவை திறந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். சீா்காழி அரசு மருத்துவமனையில் சாந்திக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

வைத்தீஸ்வரன் கோவில் போலீஸா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT