முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான

Updated On : 8 ஏப்ரல் 2025, 12:57 am IST
சகோபுரத்தில் வீதியுலா வந்த பஞ்சமூா்த்திகள்.
பகிர்:

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது.

தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபத்தில் விநாயகா், சுவாமி-அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பஞ்சமூா்த்தி சுவாமிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சகோபுரத்தில் எழுந்தருளியதும் மகாதீபாராதனை காட்டப்பட்டு, வீதியுலா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments