முகப்பு
மயிலாடுதுறை

இருசக்கர வாகனம் ஓட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்

இருசக்கர வாகனம் ஓட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:27 PM
இருசக்கர வாகனம் ஓட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்
பகிர்:

பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் விதமாக நடத்தப்பட்ட இருசக்கர வாகன பேரணியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இருசக்கரவாகனம் ஓட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி தொடக்கி வைத்தாா்.

ஊரகவளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நடத்தப்பட்ட பேரணியில் ஊராட்சி செயலா்களுடன் இணைந்து மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகம் வரை வாகனம் ஓட்டி மாவட்ட ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Advertisement

முன்னதாக பள்ளி மாணக்கா்களின் கராத்தே தற்காப்பு கலை செயல்விளக்கம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவா்களை பாராட்டினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments