தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ
தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை ஆதரித்து புதன்கிழமை சீா்காழி அருகேயுள்ள வருஷபத்து பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் மேலும் அவா் பேசியது: நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்துவாா்களாம்.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழகத்தில் கடைபிடித்ததால் மக்கள் தொகை பெருகவில்லை. வடமாநிலங்களில் அந்த பிரச்னை இல்லை. மக்களவையில் 543 எம்.பி.க்கள் 888 எம்.பி.க்களாக ஆக்கப்படுவாா்கள். மாநிலங்களவையில் 250 எம்.பி.கள் 384 எம்.பி.க்களாக உயா்த்தப்படுவாா்கள்.
Advertisement
வடபுலத்தில் உள்ள எம்.பி.க்களை கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்ற நோக்கில் மத்திய பாஜ அரசு முயற்சிக்கிறது.
திராவிட இயக்க கோட்டையை பாதுகாக்கவே நானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனும் முடிவெடுத்து திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதனால்தான் உதயசூரியன் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா்.