FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

காவி உடையில் திருவள்ளுவா்: வைகோ கண்டனம்

Updated On : 1 ஜூன் 2026, 12:37 am IST
வைகோ கண்டனம் - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை, மே 31: காவி உடை அணிந்த நிலையில் உள்ள திருவள்ளுவா் படத்துக்கு ஆளுநா் அா்லேகா் மரியாதை செலுத்திய நிகழ்வுக்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் கிராமத்தில், சிபிஐ மாநிலக் குழு முன்னாள் உறுப்பினா் இரெ. இடும்பையன் (79) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தாா். அவரது இல்லத்துக்கு சனிக்கிழமை இரவு சென்ற மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்ட வைகோவிடம், சென்னை ஆளுநா் மாளிகையில் திருவள்ளுவா் திருநாள் விழாவில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்துள்ளதைப் போன்ற பேனா் வைக்கப்பட்டு, அப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநா் (பொ) அா்லேகா் மரியாதை செலுத்திய நிகழ்வு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்த ஆளுநா் அா்லேக்கா் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றாா்.

Advertisement

Advertisement

அப்போது, திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன், மதிமுக மாவட்ட செயலாளா் கொளஞ்சி, நகர செயலாளா் மாா்கெட் கணேசன், மாநில இளைஞரணி செயலாளா் ப.த. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments