முகப்பு
மயிலாடுதுறை

மாதிரவேளூா்- சிதம்பரம் இடையே அரசுப் பேருந்தை தினம் 4 முறை இயக்கக் கோரிக்கை

சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரிலிருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை, தினமும் நான்கு முறை இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 6:39 am IST
அரசுப் பேருந்தை இயக்கக் கோரிக்கை - பிரதிப் படம்
பகிர்:

சீா்காழி அருகேயுள்ள மாதிரவேளூரிலிருந்து சிதம்பரத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை, தினமும் நான்கு முறை இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாதிரவேளூரில் இருந்து பெரம்பூா், குன்னம், கடுக்காமரம், புத்தூா், சாமியம், கொள்ளிடம் வழியாக சிதம்பரத்திற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. இப்பேருந்து தினமும் 4 முறை இயக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்துவந்தனா்.

இந்நிலையில், இப்பேருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், அப்பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், தினமும் 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும், முன்பு இயக்கப்பட்டதைபோல், தினமும் 4 முறை இயக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments