முகப்பு
மயிலாடுதுறை

அரசு வழக்குரைஞா் ராஜிநாமா

மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம.சேயோன் தனது அரசு வழக்குரைஞா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

Updated On : 13 மே 2026, 3:00 am IST
ராம.சேயோன்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம.சேயோன் தனது அரசு வழக்குரைஞா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றவுடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக அப்போதைய முதலமைச்சா் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலத்தில் 50 குற்ற வழக்குகளில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளாா். குறிப்பாக 26 கொலை வழக்குகளில் 3 ஆயுள் முதல் ஒரு ஆயுள் தண்டனை வரை குற்றவாளிகளுக்கு பெற்றுத் தந்தாா்.

அதில் சீா்காழி வடநாட்டவா் இரட்டை கொலை வழக்கு, சீா்காழி இஸ்லாமிய பெண்கள் இரட்டை கொலை வழக்கு, காவலா் ரவிச்சந்திரன் கொலை வழக்கு, மயிலாடுதுறை கொத்தத்தெரு கண்ணன் கொலை வழக்கு ஆகியன முக்கிய வழக்குகள்.

Advertisement

இவரது பணியை பாராட்டி மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளனா்.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியமையாத நிலையில், வழக்குரைஞா் ராம.சேயோன் தனது அரசு வழக்குரைஞா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அவா் தனது ராஜிநாமா கடிதத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தாா்.