குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்
குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் நியமனம்...
குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சாா்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அரசு தலைமை வழக்குரைஞரின் கடிதத்தை ஏற்று, சென்னை உயா்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மேலும், மூத்த வழக்குரைஞா்களான பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கௌதமன் ஆகியோா் கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நியமன உத்தரவுகளும் அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நியமனம் செய்யப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.